OP
Member
LEVEL 4
135 XP
அடுத்த நாள் காலையில் டாக்டர் வந்ததும், நானும் அப்பாவும் அவரை தனியே சென்று சந்தித்தோம்.
பத்மா அத்தைக்கு sugarம், BPயும் அதிகமாகி கண்ட்ரோல் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் ECG நார்மல் நிலைக்கு வரும் வரை ICU விலே இருக்கட்டும் என்று சொல்ல நாங்களும் அமைதியாக சரி என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.
சகுந்தலாவும் கீதாவும் மிகவும் கவலையாக இருந்தனர். இருவருக்குமே ஆறுதல் தேவை என்பதை உணர்ந்த நாங்கள் அவர்களின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு தைரியம் சொல்ல ஆரம்பித்தோம்.
திடீரென்று கீதா சகுந்தலாவிடம் "அக்கா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்கிறதை மாலதி அக்காகிட்ட சொல்ல வேண்டாமா?"ன்னு கேட்டாள்.
அதுவரை எங்கள் யாருக்குமே மாலதியின் நினைவு வரவில்லை. திடீரென்று சகுந்தலாவின் திருமணம் நிச்சயம் ஆனதால் நீண்ட தொலைவிலிருந்த அவளால் வர முடியவில்லை என்ற கடிதம் மட்டுமே வந்தது. அவளும் இந்த ஊருக்கு வந்து ஆறு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும். வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்கு குடிகார புருஷனைக் கூட்டிக்கொண்டு வர பயந்துகொண்டு அவள் ஊரிலேயே இருப்பதாக பத்மா அத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி கேட்டிருக்கிறேன்.
கீதா கேட்ட கேள்விக்கு சகுந்தலா எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதிலிருந்து அவளுக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் ஓட ஆரம்பித்திருந்தது எனக்கு புரிந்தது.
"என்னக்கா என்ன சொல்ற?"ன்னு திரும்பவும் கீதா கேட்க, "என்ன செய்றதுன்னு தெரியலை கீதா, அவளால அவ்வளவு தூரத்தில இருந்து நினைச்சவுடனே கிளம்பி வர முடியுமான்னு தெரியலையே"ன்னு சொன்னாள்.
"பேபி, அவங்களை வரச்சொல்லனும்னா சொல்லு, இன்னைக்கே e- ticket புக் பண்ணி அவங்களை கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு செய்றேன்"னு அப்பா அவகிட்ட "எள் என்கிறதுக்கு முன்னாடியே எண்ணை"யாய் உருகி நின்னாரு.
"மாமா, அவசரப்பட வேண்டாம். எதுக்கும் இன்னிக்கு வெயிட் பண்ணி பார்போம். அம்மாவ ஜெனரல் ரூமுக்கு மாத்திட்டாங்கன்னா, அவங்ககிட்ட கேட்டுகிட்டு அப்பறம் முடிவு செய்வோம்"ன்னு சொல்லிட்டு அந்த பேச்சுக்கு சகுந்தலா முற்றுப்புள்ளி வைத்தாள்.
முடிவு சொல்ல வேண்டிய பத்மா அத்தையின் உடல் நிலையிலோ எந்த முன்னேற்றமும் இல்லை. இதோ ICU வை விட்டு வெளியே வந்திடுவார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருக்க நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, அவரை நார்மல் வார்டிற்கு கொண்டு வரவே இல்லை. ICU வின் சின்ன கண்ணாடி மூலமாக பார்க்கும் போது ஆக்ஜிசன் சிலிண்டரின் உதவியால்தன் அவரால் மூச்சுவிட முடிவது தெரிந்தது.
அன்று மாலைவரை எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டரும் எதுவும் சொல்லாமல் "வெயிட் பண்ணுங்க பார்க்கலாம்" என்று சொல்லியபடியே இருந்தனர். அடிக்கடி "சீக்கிரமா இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லி ஏதாவது ஒரு மருந்தை வாங்கி வர என்னை ஏவிக்கொண்டே இருக்க, பணம் தண்ணீராய் செலவாகிக்கொண்டிருந்தது.
சகுந்தலா, டாக்டர்களிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், ICU விற்குள் சென்று வரும் எல்லா நர்ஸுகளையும் சினேகிதம் பிடித்து, அவர்களை விரட்டி விரட்டி தன் தாயின் நிலையை கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் ஒரு நர்ஸ், "இந்த டாக்டர், இது போன்ற ஆப்ரேஷன்ஸ் நிறைய செய்திருப்பதாகவும் இதுவரை யாருக்கும் இந்த மாதிரி வந்ததில்லை என்றும் இது கொஞ்சம் complicated case" என்று சொன்னதாக சொல்ல, எங்களுக்கு திகில் பிடிக்க ஆரம்பித்தது.
அன்று இரவு எல்லோருக்கும் தூக்கம் கண்ணை மூட வைத்தாலும், யாருக்கும் வீட்டிற்கு போக மனமில்லை. காண்டின் சாப்பாடு வயிற்றுக்கு ஒத்து வரவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அன்று முழுதும் அதையே சாப்பிட்டு ஒரு வழியாக சமாளித்தோம்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷால் தாக்கு பிடிக்க முடியாமல் அந்த வராண்டாவிலேயே படுத்து தூங்க ஆரம்பிக்க, நாங்கள் ஒவ்வொருவராக அவன் பக்கத்திலேயே சாய்ந்து அரைகுறையாக தூங்க ஆரம்பித்தோம்.
முதல் நாள் என் கை வரை வந்து கிடைக்காமல் போன கீதா, இன்றும் என் பக்கத்திலேயே படுத்து தூங்கினாள். ஆனால் எங்களுடன் இன்று சகுந்தலாவும் என் அப்பாவும் இருந்ததால் என் நகம் கூட அவள் மேல் படாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டேன்.
அடுத்த நாள் காலையில் செக் செய்ய வந்த சீனியர் டாக்டர், எங்களிடம் "பேஷண்டிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்படியும் இன்று மதியத்திற்குள் ஜெனரல் வார்டிற்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாம்" என்று சொல்லி எங்களுக்கு நிம்மதியை கொடுத்தார்.
மதியம் என்று சொன்னாலும் மாலை 6 மணி வாக்கில்தான் வார்டு மாற்றினார்கள்.
அத்தையும், சிலிண்டர் இல்லாமலேயே மூச்சு விட ஆரம்பித்திருந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எங்களிடம் கூறிவிட்டு, பேஷண்டை கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் எந்த நேரம் ஆனாலும் தனக்கு சொல்ல வேண்டும் என்றும் நர்ஸிடம் strict instruction கொடுக்க, அத்தையின் ரூமுக்கு VIP attention கொடுக்கப்பட்டது.
அடுத்த ரெண்டு நாள் அப்பா லீவு போட, சுரேஷும் ஸ்பெசல் கிளாஸ் கட் அடிக்க, ஹாஸ்பிடலில் அத்தை கண் திறந்து எங்களோடு பேச காத்துகிடந்தோம். நாங்கள் எல்லோரும் மாறி மாறி ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் வந்து சென்றாலும், எனக்கு சகுந்தலாவுடன் தனித்திருக்க வாய்ப்பு அமையவில்லை.
பக்கத்திலே இருந்தாலும், அடுத்தவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று தள்ளியே நின்று பேசிக்கொண்டோம். எங்களுக்குள் ஒரு இடைவெளி விழுந்திருந்தது. என்னால் அதை தாங்க முடியவில்லை. என் நிலை உணர்ந்த சகுந்தலா, "சுந்தர் உன்னை பார்க்க பாவமாயிருக்கு, எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ பிளீஸ்... இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமாய் சேர்த்து வச்சு உன்னை கவனிச்சுக்கிறேன்" என்று ரகசிய குரலில் என்னிடம் சொல்லி எனக்கு தெம்பு ஊட்டிக்கொண்டிருந்தாள்.
டாக்டர்களின் அயாராத முயற்சியின் பலனாய் அத்தைக்கு ஒராளவு குணம் ஆகி எங்களிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
அத்தையிடம் கீதா, "அம்மா, மாலதி அக்காவுக்கு நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறத சொல்லவேயில்லை.. அவங்களுக்கு சொல்லனுமா?"ன்னு கேட்க, அத்தைக்கும் தன் பெரிய பொண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் 'ம்ம்' என்று தலையாட்டினார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தன் மூத்த மாப்பிள்ளையை நினைத்து பயந்து, "வேண்டாம் கீதா, உன் மாமன் பெரிய முரடன், அவன் அவளைக் கூட்டிக்கிட்டு வரமாட்டான். அப்படியே வந்தாலும், இங்க வந்து தேவையில்லாம சண்டை போட்டு, நம்ம உறவை கெடுத்திடுவான். என் பிள்ளை எங்கேயோ கண்காணாத இடத்தில இப்ப இருக்கிறமாதிரியே நிம்மதியா இருக்கட்டும்.. நேர்ல பார்க்கனும்கிற ஆசையில வரச்சொல்லிட்டு, அப்பறம் மனசு கஷ்டப்படவேண்டாம்"ன்னு சொன்னார்.
அதை கேட்ட எங்கப்பா, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, உங்க பேத்தியை பாத்தீங்கனாவே, உங்களோட பாதி வியாதி சரியாயிடும். நான் அவங்களுக்கு ஒரு வாரத்தில திரும்பி போற மாதிரி ரிட்டர்ன் டிக்கெட்டும் எடுத்து அனுப்பிறேன், உங்க மூத்த மாப்பிள்ளை பிரச்சனை எதுவும் பண்ணினாலும் நாம் சமாளிச்சுக்கலாம்" என்று சொல்ல, அத்தையின் முகத்தில் தன் மூத்த மகளை பார்க்கப்போற மகிழ்ச்சியில் அப்போதே வியாதி குணமாக ஆரம்பித்தது.
அப்பாவும் சொன்ன மாதிரியே டிக்கெட் அரேஞ் செய்து, அவர்களுடன் போனில் பேசி, அவர்கள் வர ஏற்பாடு செய்தார். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மாலதி பயந்து விடுவாள் என்பதால் அதை அவளிடம் சொல்லவில்லை. தங்களின் கல்யானத்திற்கே வரவில்லை என்பதால் குழந்தையின் முழு ஆண்டு தேர்வு முடிந்து இப்ப லீவில் சும்மாதானே இருப்பாள் அதனால் குழந்தையை கூட்டிகொண்டு கட்டாயம் வர வேண்டும் என்று சகுந்தலா ஆசைப்படுவதாக சொல்ல, மாலதியும் அவள் கணவனும் கிளம்பி வருகிறோம் என்று சொன்னார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின் அக்காவை பார்க்கப்போகிற சந்தோசம் தங்கைகளிடம் தொற்றிக்கொள்ள, அடுத்து எந்த நேரமும் பெரியாக்காவுடனான தங்களது சிறுவயது நிகழ்சிகளை அசை போட்டு பேச ஆரம்பித்தனர். சின்னக்குழந்தை யாரும் எங்கள் வீட்டில் இல்லாததால், அக்கா குழந்தையின் வரவை ஆவலோடு எதிர் பார்க்க ஆரம்பித்தனர்.
திருமணத்திற்கு பின் முதல் முதலாக தங்கள் வீட்டிற்கு வரும் அக்கா குடும்பத்திற்கு சிறப்பான வரவேற்ப்பு கொடுக்க வேண்டும் என்று அப்பாவோடு கடைதெருவுக்கு போய், துணி பொம்மை என்று சகுந்தலா பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு வந்தாள்.
பத்மா அத்தையும் மாலதி வருவதற்குள் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிட வேண்டும், குழந்தையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டாம் இன்பெக்ஷன் ஆகிவிடும் என்று கவலைப்பட்டதால், அன்று காலையே டாக்டரிடம் பேசி வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்தோம். ஆனாலும் "காலை, மாலை ரெண்டு வேளையும் ஹாஸ்பிடல் வந்து செக்கப் செய்து கொள்ள வேண்டும்" என்று டாக்டர் சொல்ல, 'சரி' என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.
சகுந்தலாவிற்கு அன்று மாலை மதுரை ரயில்வே ஸ்டேசன் சென்று அவர்களை வரவேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றாலும், அத்தையுடன் ஹாஸ்பிடல் போக வேண்டியதிருந்ததால், கீதா என்னுடன் காரில் கிளம்பினாள்.
பத்மா அத்தைக்கு sugarம், BPயும் அதிகமாகி கண்ட்ரோல் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் ECG நார்மல் நிலைக்கு வரும் வரை ICU விலே இருக்கட்டும் என்று சொல்ல நாங்களும் அமைதியாக சரி என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.
சகுந்தலாவும் கீதாவும் மிகவும் கவலையாக இருந்தனர். இருவருக்குமே ஆறுதல் தேவை என்பதை உணர்ந்த நாங்கள் அவர்களின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு தைரியம் சொல்ல ஆரம்பித்தோம்.
திடீரென்று கீதா சகுந்தலாவிடம் "அக்கா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்கிறதை மாலதி அக்காகிட்ட சொல்ல வேண்டாமா?"ன்னு கேட்டாள்.
அதுவரை எங்கள் யாருக்குமே மாலதியின் நினைவு வரவில்லை. திடீரென்று சகுந்தலாவின் திருமணம் நிச்சயம் ஆனதால் நீண்ட தொலைவிலிருந்த அவளால் வர முடியவில்லை என்ற கடிதம் மட்டுமே வந்தது. அவளும் இந்த ஊருக்கு வந்து ஆறு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும். வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்கு குடிகார புருஷனைக் கூட்டிக்கொண்டு வர பயந்துகொண்டு அவள் ஊரிலேயே இருப்பதாக பத்மா அத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி கேட்டிருக்கிறேன்.
கீதா கேட்ட கேள்விக்கு சகுந்தலா எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதிலிருந்து அவளுக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் ஓட ஆரம்பித்திருந்தது எனக்கு புரிந்தது.
"என்னக்கா என்ன சொல்ற?"ன்னு திரும்பவும் கீதா கேட்க, "என்ன செய்றதுன்னு தெரியலை கீதா, அவளால அவ்வளவு தூரத்தில இருந்து நினைச்சவுடனே கிளம்பி வர முடியுமான்னு தெரியலையே"ன்னு சொன்னாள்.
"பேபி, அவங்களை வரச்சொல்லனும்னா சொல்லு, இன்னைக்கே e- ticket புக் பண்ணி அவங்களை கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு செய்றேன்"னு அப்பா அவகிட்ட "எள் என்கிறதுக்கு முன்னாடியே எண்ணை"யாய் உருகி நின்னாரு.
"மாமா, அவசரப்பட வேண்டாம். எதுக்கும் இன்னிக்கு வெயிட் பண்ணி பார்போம். அம்மாவ ஜெனரல் ரூமுக்கு மாத்திட்டாங்கன்னா, அவங்ககிட்ட கேட்டுகிட்டு அப்பறம் முடிவு செய்வோம்"ன்னு சொல்லிட்டு அந்த பேச்சுக்கு சகுந்தலா முற்றுப்புள்ளி வைத்தாள்.
முடிவு சொல்ல வேண்டிய பத்மா அத்தையின் உடல் நிலையிலோ எந்த முன்னேற்றமும் இல்லை. இதோ ICU வை விட்டு வெளியே வந்திடுவார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருக்க நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, அவரை நார்மல் வார்டிற்கு கொண்டு வரவே இல்லை. ICU வின் சின்ன கண்ணாடி மூலமாக பார்க்கும் போது ஆக்ஜிசன் சிலிண்டரின் உதவியால்தன் அவரால் மூச்சுவிட முடிவது தெரிந்தது.
அன்று மாலைவரை எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டரும் எதுவும் சொல்லாமல் "வெயிட் பண்ணுங்க பார்க்கலாம்" என்று சொல்லியபடியே இருந்தனர். அடிக்கடி "சீக்கிரமா இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லி ஏதாவது ஒரு மருந்தை வாங்கி வர என்னை ஏவிக்கொண்டே இருக்க, பணம் தண்ணீராய் செலவாகிக்கொண்டிருந்தது.
சகுந்தலா, டாக்டர்களிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், ICU விற்குள் சென்று வரும் எல்லா நர்ஸுகளையும் சினேகிதம் பிடித்து, அவர்களை விரட்டி விரட்டி தன் தாயின் நிலையை கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் ஒரு நர்ஸ், "இந்த டாக்டர், இது போன்ற ஆப்ரேஷன்ஸ் நிறைய செய்திருப்பதாகவும் இதுவரை யாருக்கும் இந்த மாதிரி வந்ததில்லை என்றும் இது கொஞ்சம் complicated case" என்று சொன்னதாக சொல்ல, எங்களுக்கு திகில் பிடிக்க ஆரம்பித்தது.
அன்று இரவு எல்லோருக்கும் தூக்கம் கண்ணை மூட வைத்தாலும், யாருக்கும் வீட்டிற்கு போக மனமில்லை. காண்டின் சாப்பாடு வயிற்றுக்கு ஒத்து வரவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அன்று முழுதும் அதையே சாப்பிட்டு ஒரு வழியாக சமாளித்தோம்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷால் தாக்கு பிடிக்க முடியாமல் அந்த வராண்டாவிலேயே படுத்து தூங்க ஆரம்பிக்க, நாங்கள் ஒவ்வொருவராக அவன் பக்கத்திலேயே சாய்ந்து அரைகுறையாக தூங்க ஆரம்பித்தோம்.
முதல் நாள் என் கை வரை வந்து கிடைக்காமல் போன கீதா, இன்றும் என் பக்கத்திலேயே படுத்து தூங்கினாள். ஆனால் எங்களுடன் இன்று சகுந்தலாவும் என் அப்பாவும் இருந்ததால் என் நகம் கூட அவள் மேல் படாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டேன்.
அடுத்த நாள் காலையில் செக் செய்ய வந்த சீனியர் டாக்டர், எங்களிடம் "பேஷண்டிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்படியும் இன்று மதியத்திற்குள் ஜெனரல் வார்டிற்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாம்" என்று சொல்லி எங்களுக்கு நிம்மதியை கொடுத்தார்.
மதியம் என்று சொன்னாலும் மாலை 6 மணி வாக்கில்தான் வார்டு மாற்றினார்கள்.
அத்தையும், சிலிண்டர் இல்லாமலேயே மூச்சு விட ஆரம்பித்திருந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எங்களிடம் கூறிவிட்டு, பேஷண்டை கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் எந்த நேரம் ஆனாலும் தனக்கு சொல்ல வேண்டும் என்றும் நர்ஸிடம் strict instruction கொடுக்க, அத்தையின் ரூமுக்கு VIP attention கொடுக்கப்பட்டது.
அடுத்த ரெண்டு நாள் அப்பா லீவு போட, சுரேஷும் ஸ்பெசல் கிளாஸ் கட் அடிக்க, ஹாஸ்பிடலில் அத்தை கண் திறந்து எங்களோடு பேச காத்துகிடந்தோம். நாங்கள் எல்லோரும் மாறி மாறி ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் வந்து சென்றாலும், எனக்கு சகுந்தலாவுடன் தனித்திருக்க வாய்ப்பு அமையவில்லை.
பக்கத்திலே இருந்தாலும், அடுத்தவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று தள்ளியே நின்று பேசிக்கொண்டோம். எங்களுக்குள் ஒரு இடைவெளி விழுந்திருந்தது. என்னால் அதை தாங்க முடியவில்லை. என் நிலை உணர்ந்த சகுந்தலா, "சுந்தர் உன்னை பார்க்க பாவமாயிருக்கு, எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ பிளீஸ்... இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமாய் சேர்த்து வச்சு உன்னை கவனிச்சுக்கிறேன்" என்று ரகசிய குரலில் என்னிடம் சொல்லி எனக்கு தெம்பு ஊட்டிக்கொண்டிருந்தாள்.
டாக்டர்களின் அயாராத முயற்சியின் பலனாய் அத்தைக்கு ஒராளவு குணம் ஆகி எங்களிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
அத்தையிடம் கீதா, "அம்மா, மாலதி அக்காவுக்கு நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறத சொல்லவேயில்லை.. அவங்களுக்கு சொல்லனுமா?"ன்னு கேட்க, அத்தைக்கும் தன் பெரிய பொண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் 'ம்ம்' என்று தலையாட்டினார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தன் மூத்த மாப்பிள்ளையை நினைத்து பயந்து, "வேண்டாம் கீதா, உன் மாமன் பெரிய முரடன், அவன் அவளைக் கூட்டிக்கிட்டு வரமாட்டான். அப்படியே வந்தாலும், இங்க வந்து தேவையில்லாம சண்டை போட்டு, நம்ம உறவை கெடுத்திடுவான். என் பிள்ளை எங்கேயோ கண்காணாத இடத்தில இப்ப இருக்கிறமாதிரியே நிம்மதியா இருக்கட்டும்.. நேர்ல பார்க்கனும்கிற ஆசையில வரச்சொல்லிட்டு, அப்பறம் மனசு கஷ்டப்படவேண்டாம்"ன்னு சொன்னார்.
அதை கேட்ட எங்கப்பா, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, உங்க பேத்தியை பாத்தீங்கனாவே, உங்களோட பாதி வியாதி சரியாயிடும். நான் அவங்களுக்கு ஒரு வாரத்தில திரும்பி போற மாதிரி ரிட்டர்ன் டிக்கெட்டும் எடுத்து அனுப்பிறேன், உங்க மூத்த மாப்பிள்ளை பிரச்சனை எதுவும் பண்ணினாலும் நாம் சமாளிச்சுக்கலாம்" என்று சொல்ல, அத்தையின் முகத்தில் தன் மூத்த மகளை பார்க்கப்போற மகிழ்ச்சியில் அப்போதே வியாதி குணமாக ஆரம்பித்தது.
அப்பாவும் சொன்ன மாதிரியே டிக்கெட் அரேஞ் செய்து, அவர்களுடன் போனில் பேசி, அவர்கள் வர ஏற்பாடு செய்தார். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மாலதி பயந்து விடுவாள் என்பதால் அதை அவளிடம் சொல்லவில்லை. தங்களின் கல்யானத்திற்கே வரவில்லை என்பதால் குழந்தையின் முழு ஆண்டு தேர்வு முடிந்து இப்ப லீவில் சும்மாதானே இருப்பாள் அதனால் குழந்தையை கூட்டிகொண்டு கட்டாயம் வர வேண்டும் என்று சகுந்தலா ஆசைப்படுவதாக சொல்ல, மாலதியும் அவள் கணவனும் கிளம்பி வருகிறோம் என்று சொன்னார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின் அக்காவை பார்க்கப்போகிற சந்தோசம் தங்கைகளிடம் தொற்றிக்கொள்ள, அடுத்து எந்த நேரமும் பெரியாக்காவுடனான தங்களது சிறுவயது நிகழ்சிகளை அசை போட்டு பேச ஆரம்பித்தனர். சின்னக்குழந்தை யாரும் எங்கள் வீட்டில் இல்லாததால், அக்கா குழந்தையின் வரவை ஆவலோடு எதிர் பார்க்க ஆரம்பித்தனர்.
திருமணத்திற்கு பின் முதல் முதலாக தங்கள் வீட்டிற்கு வரும் அக்கா குடும்பத்திற்கு சிறப்பான வரவேற்ப்பு கொடுக்க வேண்டும் என்று அப்பாவோடு கடைதெருவுக்கு போய், துணி பொம்மை என்று சகுந்தலா பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு வந்தாள்.
பத்மா அத்தையும் மாலதி வருவதற்குள் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிட வேண்டும், குழந்தையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டாம் இன்பெக்ஷன் ஆகிவிடும் என்று கவலைப்பட்டதால், அன்று காலையே டாக்டரிடம் பேசி வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்தோம். ஆனாலும் "காலை, மாலை ரெண்டு வேளையும் ஹாஸ்பிடல் வந்து செக்கப் செய்து கொள்ள வேண்டும்" என்று டாக்டர் சொல்ல, 'சரி' என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.
சகுந்தலாவிற்கு அன்று மாலை மதுரை ரயில்வே ஸ்டேசன் சென்று அவர்களை வரவேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றாலும், அத்தையுடன் ஹாஸ்பிடல் போக வேண்டியதிருந்ததால், கீதா என்னுடன் காரில் கிளம்பினாள்.