Member
LEVEL 3
15 XP
எம் பேரு சுந்தர். மதுரைக்கு பக்கத்துல, கிராமத்திலேருந்து டவுனுக்கு படிப்படியா முன்னேறிக்கிட்ருந்த "அஸ்தினாபுரம்"கிற அழகான ஊர்லதான், அப்பா, அம்மா,தம்பி சுரேசுன்னு எங்க பேமிலி இருந்துச்சு. எங்க வீடு, அரண்மனை மாதிரி கொஞ்சம் பெரிய வீடுதான். உள்ள நுழஞ்ச உடனேயே, ஹாலுக்கு பக்கத்துல லெப்ட் சைடுல இருக்கிற, பெரிய ரூம் என்னோடது, அடுத்து கொஞ்சம் சின்ன ரூம், தம்பி சுரேசுக்குன்னு, அலாட் செஞ்சிருந்தோம். என் ரூமிற்கு எதிரே இருந்த ரூம், கெஸ்ட் ரூம்.
அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, "டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு". அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. "ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு" அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.
எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.
புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, 'அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு' வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, 'மாமா'ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, "இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு" சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.
பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி... எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா 'கடலோரகவிதைகள்' பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, "கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா" அம்மா சொல்வாங்க. "பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா", அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். "என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்" அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.
சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, "போகமாட்டேன்"னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் "சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு" சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, "அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு" ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே 'ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்'ங்கிறதால அவதான் 'கிளாஸ் லீடர்'. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ 'பெட்'ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து 'ஸ்மைல்' பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.
நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது 'ரோல்' மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு 'டீச்சர்' வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத 'கேன்சல்' பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய 'சகுந்தலா புருசன்'னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க 'எலிமெண்டரி' ஸ்கூல விட்டு, 'ஹைஸ்கூல்' போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா "இவ foreignல தான் போயி செட்டிலாவா"ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, "இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை"ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், "டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு" சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க. அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல 'நம்பர் ஒன்' என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப 'கியூட்டா' இருக்கிறதால, "பேபி" னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.
அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, "டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு". அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. "ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு" அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.
எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.
புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, 'அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு' வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, 'மாமா'ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, "இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு" சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.
பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி... எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா 'கடலோரகவிதைகள்' பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, "கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா" அம்மா சொல்வாங்க. "பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா", அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். "என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்" அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.
சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, "போகமாட்டேன்"னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் "சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு" சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, "அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு" ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே 'ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்'ங்கிறதால அவதான் 'கிளாஸ் லீடர்'. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ 'பெட்'ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து 'ஸ்மைல்' பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.
நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது 'ரோல்' மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு 'டீச்சர்' வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத 'கேன்சல்' பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய 'சகுந்தலா புருசன்'னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க 'எலிமெண்டரி' ஸ்கூல விட்டு, 'ஹைஸ்கூல்' போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா "இவ foreignல தான் போயி செட்டிலாவா"ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, "இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை"ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், "டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு" சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க. அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல 'நம்பர் ஒன்' என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப 'கியூட்டா' இருக்கிறதால, "பேபி" னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.