OP
Member
LEVEL 4
125 XP
பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!!
பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. 'கறை.. தேடினாலும் கிடைக்காது..' என்பது மாதிரி காணாமல் போனார்..!! 'வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..' என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. 'ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!' என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!
சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. 'டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!' என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!
தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி 'பப்பரக்கா' என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். 'ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!' என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், 'ஓ.. பேபி.. பேபி..' என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.
"ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??" என கிண்டலான குரலில் கேட்டான்.
"எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??" சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.
"என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.
"யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!" என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.
"நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்... கொர்கொர்ர்ர்...!!"
காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.
"இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??" சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.
"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.
"ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!"
என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் 'ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..' என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,
"ஆங்.. இது சேனல்..!!"
என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,
"ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!" என்று சண்டை போட்டாள்.
"குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!"
"ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!" சங்கீதா நக்கலாக சொல்ல,
"ஆ...மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!" என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.
சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.
பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. 'கறை.. தேடினாலும் கிடைக்காது..' என்பது மாதிரி காணாமல் போனார்..!! 'வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..' என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. 'ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!' என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!
சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. 'டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!' என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!
தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி 'பப்பரக்கா' என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். 'ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!' என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், 'ஓ.. பேபி.. பேபி..' என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.
"ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??" என கிண்டலான குரலில் கேட்டான்.
"எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??" சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.
"என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.
"யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!" என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.
"நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்... கொர்கொர்ர்ர்...!!"
காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.
"இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??" சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.
"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.
"ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!"
என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் 'ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..' என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,
"ஆங்.. இது சேனல்..!!"
என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,
"ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!" என்று சண்டை போட்டாள்.
"குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!"
"ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!" சங்கீதா நக்கலாக சொல்ல,
"ஆ...மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!" என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.
சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.