அன்புள்ள ராட்சசி ( Completed )

OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"

"ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!"

"என்ன அட்வர்டைஸ்மன்ட்..??"

"அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.

"ஹஹாஹா..!!! லூசு..!!!!"

"ஆமாம்.. உன் மேல..!!"

அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!

"நித்தியா உன் பேரு..??"

"ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!"

"ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!"

"ஹாஹா.. யெஸ்..!!"

மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே,

"எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!" என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.

"இன்னொரு பேரா.. என்னா அது..??"

"உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!"

"என்னன்னு சொல்லு..!!"

"ஸ்ரீனி..!!"

"ஸ்ரீனியா..??" அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.

"யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??"

மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!

"ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??"

"ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!" மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.

"அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல.."

"யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!"

அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! 'இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??' அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!!

"ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!"

"ஹாஹாஹாஹா..!!!" மீரா அழகாக சிரித்தாள்.

சென்ற அத்தியாத்திலேயே கதை முடிந்துவிட்டது..!! அறுசுவை விருந்தை பருகி முடித்த பின்பும்.. இறுதியில் கொஞ்சம் இனிப்பு சுவைக்க விரும்புவர்களுக்காக மட்டுமே இந்த அத்தியாயம்..!!

அடுத்தநாளே அசோக் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டான்..!! 'பின்னந்தலையில் அடிபட்டு அதிகப்படியான ரத்தம் வெளியானதால், ஒரு நீண்ட மயக்கம்..!! காயத்திற்கு கட்டு போட்டாயிற்று.. சிராய்ப்புகளுக்கு மருந்து பூசியாயிற்று..!! ஊடு கதிர்ப்படம் ஆராய்ந்து.. உட்காயம் ஏதுமில்லையென உறுதியும் செய்தாயிற்று..!! இனி அச்சப்படுவதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.. இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..!!' என்று சிகிச்சையளித்த மருத்துவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்..!!

சவூதியில் வேலைக்கான தனது ஒப்பந்தத்தை.. முறித்துக்கொள்வதாக மீரா முடிவெடுத்தாள்..!! அவளுக்கு வேலையும் விசாவும் ஏற்பாடு செய்திருந்த கன்ஸல்டன்ஸிக்கு.. நஷ்ட ஈடாக ஒரு கணிசமான தொகையை அழவேண்டி இருந்தது..!! கன்ஸல்டன்ஸியின் வாயை அடைக்கிற பணியை.. மீராவுக்கு அதிக சிரமம் தராமல், மணிபாரதியே கவனித்துக் கொண்டார்..!!

சவூதியில் உபயோகமாகும் என்று கருதி, மீரா வாங்கிய அந்த புத்தகம்.. திறக்கப்படாமல் மூடியே இருந்தது..!! செக்கின் செய்யப்பட்ட அவளுடைய ட்ராவல் பேக் மட்டும்.. ரியாத் வரை பயணித்து.. விமான நிலையத்தின் பொருள் பாதுகாப்பு அறையை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு.. ஒருவாரம் ஆனதும் வேறொரு ஃப்ளைட் பிடித்து சென்னை திரும்பியது..!!

மீராவின் வீடு அபகரிக்கப்பட்டதால்.. அசோக்கின் வீட்டிலேயே அவள் தங்கிக்கொள்ளுமாறு ஆகிப்போனது..!! சங்கீதாவின் அறையிலேயே அவளுக்கென்று ஒரு எக்ஸ்ட்ரா படுக்கை..!! மீரா அசோக்கிடம் சொன்ன நான்கு பெயர்களுடன்.. மீரா என்பதுமே அவளுக்கு ஐந்தாவது பெயராக மாறிப் போனது..!! அசோக்கின் குடும்பத்தினர்.. நித்தி என்று அழைப்பதைவிட.. மீரா என்றே பெரும்பாலும் அழைத்தனர்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. 'அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..' என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!

"உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!" - பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.

"இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??" - அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.

"இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!" - சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!" - காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!

அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

கிஷோரின் பெற்றோர் அசோக்கின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்..!! 'இந்த வீட்டுக்கு மருமகன்னா.. எங்களுக்கு நீ மக மாதிரிதான்..' மீராவின் கன்னத்தை பற்றி அன்பை பொழிந்தாள் கிஷோரின் அம்மா..!! வந்தவர்கள் உண்டுமுடித்து கல்யாணப் பேச்சை எடுத்தபோது..

"எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. நான் டைரக்டரா ஆனப்புறந்தான் எல்லாம்..!!" அசோக் திடீரென குண்டை தூக்கிப் போட்டான்.

"ஆமாம்..!! நானும் ஒரு படம் தனியா சினிமாட்டோக்ராஃபி பண்ணப்புறந்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..!!" - அசோக்குடன் இணைந்துகொண்டான் அருமைத்தோழன் கிஷோர்.

இருவரையும் சமாதானம் செய்ய முயன்று.. இரண்டு குடும்பத்தினரும் தோற்றுப் போயினர்..!! வேறு வழியில்லாமல்.. 'எப்படியும் போங்க' என்று.. அவர்களுடைய எண்ணம்போலவே விட்டுவிட்டனர்..!!

பிறகு.. வேறொரு சந்தர்ப்பத்தில்.. தனிமையில் இருக்கையில்.. அசோக்கின் இடுப்பை இறுக்கிக்கொண்டு மீரா பெருமிதமாக சொன்னாள்..!!

"ஆமால்ல.. டைரக்டர் ஆகணும்ன்றது உன் கனவுல.. உன் லட்சியம்ல..?? நீ சொன்னது சரிதான் அசோக்.. உன் லட்சியத்துக்கு என்னால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக்கூடாது..!! நீ டைரக்டர் ஆகுற வரை நான் வெயிட் பண்றேன்டா..!!"

"ஐயையே..!! லட்சியம், கனவு.. அதுலாம் ஒரு எழவும் இல்ல..!!" அசோக்கோ முகத்தை சுளித்தான்.

"எ..என்ன சொல்ற நீ..?? அ..அப்புறம்.. அப்புறம் எதுக்கு அத்தை, மாமாட்ட அப்படி சொன்ன..??"

"உடனே கல்யாணம் வேணாம்னு தோணுச்சு.. அதான்..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"

"எப்படி சொல்றது.. ம்ம்ம்ம்ம்... நாம இதுவரை சரியாவே லவ் பண்ணல மீரா.. நாம பழகுன காலத்துலலாம், எப்பப்பாரு உன்கிட்ட அடியும் திட்டும்தான் வாங்கிட்டு இருந்திருக்கேன்.. ரொமான்ஸ்ன்றது சுத்தமா இல்ல..!! இப்போத்தான் நீ அந்த ரொமான்ஸ் மூட்க்கே வந்திருக்குற.. இப்போப்போய் உடனே கல்யாணம்னா..?? அதான்.. கொஞ்சநாள் இப்படியே ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு.. அப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்ற..??"

அசோக் இளிப்புடன் கேட்க.. மீரா அவனை உர்ரென்று முறைத்தாள்..!! சற்றுமுன் ஆசையாக தனது தோள் மீது எடுத்துப் போட்டிருந்த அவனது கையை.. இப்போது வெடுக்கென்று விசிறியடித்தாள்..!!

"சங்கீதா சொல்றது கரெக்ட்தான்டா.. சரியான கேடிப்பயடா நீ..!!"

"ச்சேச்சே.. அப்டிலாம் இல்ல மீரா..!!"

"ஹ்ம்ம்.. அந்தவகைல கிஷோர் அண்ணாவாவது லட்சியம், கனவுன்னு ஒரு குறிக்கோளோட இருக்குறார்..!!"

"ஹாஹா.. யார் சொன்னா..?? அவனுக்கும் அதுலாம் ஒன்னும் கெடையாது..!!"

"ஓ..!! அப்புறம் எதுக்கு அவரும் மேரேஜை தள்ளிப்போட்டாரு..??"

"பின்ன..?? மேரேஜ் ஆறதுக்கு முன்னாடியே.. இவ அவனைப்போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுறா.. மேரேஜ் மட்டும் ஆகிட்டா கேக்கவே வேணாம்..!! எவ்வளவுநாள் தள்ளிப் போகுதோ அவ்வளவுநாள் அவன் தலை தப்பிச்சது..!! அதான் பையனும் எனக்கு ஜால்ரா போட்டான்..!!"

"அடப்பாவிங்களா..!!!!!" மீரா வாயை பிளந்தாள்.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

சங்கீதாவின் அறை மீராவின் அறையுமாகவும் ஆகிப்போனது என்று சொன்னேன் அல்லவா..?? சில சமயங்களில்.. அசோக் வந்து தங்கையின் அறைக்கதவை தட்டுவான்..!! கதவு திறக்கிற சங்கீதா கடுப்புடன் அண்ணனை முறைப்பாள்..!!

"என்ன வேணும்..??"

"மீரா இருக்குறாளா சங்கு..??" அசோக் குழைவான்.

"அண்ணி தூங்குறாங்க..!!"

"கொஞ்சம் எழுப்பேன்..!!"

"எதுக்குன்னு சொல்லு..!!"

"பேசணும்..!!"

"நைட் பதினோரு மணிக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு..?? காலைல பேசிக்கலாம்.. ரூமுக்கு போ..!!"

"கொஞ்ச நேரம் சங்கு..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? நைட் பத்து மணிக்கு மேல உன்னை அண்ணி பக்கத்துல விடக்கூடாதுன்னு மம்மியோட ஆர்டர்..!! போ போ.. எல்லாம் காலைல பேசிக்கலாம்..!!"

"ப்ளீஸ்டி..!!"
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"இப்போ போறியா இல்லையா..??"

"ஹேய்.. கொஞ்ச நேரம்..!!"

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் புள்ளைய..!!"

சங்கீதா அந்தமாதிரி சப்தம் எழுப்பியதும்.. அசோக் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி ஓடுவான்..!! கதவை மூடிவிட்டு சங்கீதா படுக்கையில் சரிகையில்.. பக்கத்தில் படுத்திருக்கும் மீரா அவளுடைய புஜத்தை சொறிவாள்..!!

"சொல்லுங்க அண்ணி..!!"

"உங்க அண்ணனை பாத்தா பாவமா இருக்கு சங்கி..!!"

"அதுக்கு..??"

"நான்வேணா கொஞ்சநேரம் போய் பேசிட்டு வரனே..??"

மீரா ஏக்கமாக கேட்க, சங்கீதா அவளையும் ஒரிரு வினாடிகள் முறைப்பாள்.. பிறகு காட்டு கத்தலாக கத்துவாள்..!!

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் மருமகள.!!"

அவ்வளவுதான்.. மீரா போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சுருங்கிப் போவாள்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

அசோக்கும் மீராவும் ஒன்றிணைந்து ஒருவாரம் கழித்து..

அப்போதுதான் ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியிருந்த அசோக்.. வந்ததுமே அலமாரியை துழாவி அன்றைய நாளிதழை வெளியே எடுத்தான்..!! காலையிலேயே வாசிக்காமல் விட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டு.. கவனமுடன் இப்போது அந்தச்செய்தியை வரிவரியாக வாசித்தான்..!!

"அப்படி என்ன இன்ட்ரஸ்டிங் ந்யூஸ்..??"

பின்பக்கம் இருந்து மீராவின் குரல் கேட்டதும்.. அசோக் பதறிப் போனான்..!! அவசரமாக அந்த நாளிதழை தனது முதுகுப்புறமாக மறைத்தவன்.. மீராவை ஏறிட்டு திணறலும், குழறலுமாய் சொன்னான்..!!

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல மீரா..!!"

அவனுடைய திருட்டு முழியே, ஏதோ விஷயம் இருக்கிறது என்று மீராவுக்கு காட்டி கொடுத்துவிட்டது. குழப்பமாக புருவத்தை நெறித்தாள்.

"எ..என்னாச்சு.. ஏன் ந்யூஸ் பேப்பரை மறைக்கிற..??"

"நா..நான் எங்க மறைச்சேன்.. நா..நான் சும்மா.."

"இல்ல.. பொய் சொல்ற.. எதையோ மறைக்கிற.. ந்யூஸ் பேப்பரை குடு..!!"

"ப்ச்.. அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"ம்ஹூம்.. ஏதோ இருக்கு.. குடு அதை..!!"

"இல்ல மீரா..!!"

"ப்ச்.. குடுன்றேன்ல.. குடு..!!"

அசோக்கின் கையிலிருந்து அந்த நாளிதழை மீரா வலுக்கட்டாயமாக பிடுங்கினாள். முதல் பக்கத்திலேயே வெளியாகிருந்த அந்த செய்தியின் மீது பார்வையை வீசினாள்.

"ரெட்ஹில்ஸ் ரெட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது..!! கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகள் போலீசாரால் கைது..!!"

செய்தித் தலைப்புக்கு அருகிலேயே.. கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர்களின் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படங்களும் அச்சிடப் பட்டிருந்தன..!! மீரா முணுமுணுப்பான குரலில் விரிவான செய்தியை மேலும் வாசித்தாள்..!!

"சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காசி (வயது 31). தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கும், பணக்கார இளைஞர்களுக்கும் சட்ட விரோதமாக விநியோகிப்பதை தொழிலாக கொண்டவர். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த மாதம் 28-ந்தேதி, காசியும் அவரது நண்பர் விஜயசாரதி (வயது 27) என்பவரும், ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட புலன்விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியிருக்கிறது. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகளும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”

"கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அல்ஃபோன்ஸ்தான், வழக்கமாக காசிக்கு போதை மருந்து சப்ளை செய்பவர். இருவருக்கும் சில மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்திருக்கிறது. காசி தனக்கு நாற்பது லட்ச ரூபாய் பணம் தர வேண்டி இருந்ததாகவும், அதைத்தராமல் அவர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து காசியை கொலை செய்ததாகவும் அல்ஃபோன்ஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயசாரதியும், காசியை கொலை செய்ய வந்தவர்களிடம் சிக்கி தானும் கொலையானதுதான் மிகவும் பரிதாபகரமான.." வாசித்தது போதுமென்று இடையில் நிறுத்திய மீரா,

"ஹ்ம்ம்.. இப்போவாவது ஒருவழியா கண்டுபிடிச்சாங்களே.. இந்தப் பிரச்சினையில தேவை இல்லாம நான் மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயந்துட்டேன் அசோக்..!! என் பக்கம் மட்டும் சந்தேகம் திரும்பி இருந்துச்சுன்னு வச்சுக்கோ.. அவ்வளவுதான் நான்.. காலி..!!" என்று நிம்மதியான குரலில் சொன்னாள்.

"ஏன் அப்டி சொல்ற..??"
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"பின்ன என்ன..?? நான் கொலை பண்ணலைன்னு உன்னை நம்பவைக்கவே அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. போலீஸ்ட்ட என்னத்த சொல்லி நம்ப வைக்கிறது..??"

"என்ன பண்ண சொல்ற.. அந்த எடத்துல உன் பென்டன்ட் பாத்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!"

"எப்படி.. நான்தான் ரெண்டு பேரையும் கொலை பண்ணிருப்பேன்னா..??"

"ஆமாம்..!!"

"ஹ்ம்ம்.. ஆக்சுவலா அதுதான் நடந்திருக்கும்.. அந்தப்பொறுக்கியை போட்டுத்தள்ற ப்ளான்லதான் அங்க போனேன்.. அவ்ளோ ஆத்திரம் எனக்கு..!! ஆனா.. ஒரு அஞ்சு நிமிஷ கேப்புல.. எனக்கு முன்னாடி இவனுக முந்திக்கிட்டானுக..!! வீட்டுக்குள்ள நுழையுறேன்.. அந்தப்பொறுக்கி அப்படியே ரத்த வெள்ளத்துல கெடக்குறான்.. கூடவே இந்த காசி வேற.. செம ஷாக் எனக்கு..!!”

"ம்ம்..!!"

“சரி வந்ததுதான் வந்தோம்.. செல்ஃபோனை மட்டும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு வெளிய வந்தா.. உன் கன்ஃப்யூசன் வேற..!!"

"என் கன்ஃப்யூசனா..??"

"ஆமாம்.. அந்த எஸ்.பியும் நீயும் ஜோடி போட்டு நடந்து வர்றீங்க..!! எனக்கு கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னே புரியல..!! அப்புறம் பட்டுன்னு சுதாரிச்சு.. பின்பக்கமா ஓடி எஸ்கேப் ஆனேன்..!! செமையா கொழப்பி விட்டுட்ட என்னை..!!"

"ம்க்கும்..!! நீ என்னை கொழப்பி விட்டதை விடவா..??"

"ஹாஹா..!! ஆனா ஒன்னு.. நீ பண்ணுன கொழப்பத்துல ஒரே ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு..!!"

"என்ன..??"

"ஹ்ம்ம்.. தங்கம் விக்கிற வெலைல.. ஆறு கிராம் இப்படி அநியாயமா தொலைஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலைல இருந்தேன்.. உன் மூலமா அது என்கிட்டயே திரும்ப வந்து சேர்ந்துடுச்சு..!!"

புன்னகையுடன் சொன்ன மீரா.. தனது வலது கையை உயர்த்தி அசைத்துக்காட்ட.. அந்தக்கையை தழுவியிருந்த புதியதொரு ப்ரேஸ்லட்டில்.. அந்த இதயவடிவ பென்டன்ட் ஊசலாடியது..!! அவள் சொன்னதைக்கேட்டு அசோக் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து மீராவும் சிரித்தாள்..!! ஒருசில வினாடிகள் மத்தாப்பு சிதறலாய் சிரித்தவள்.. திடீரென ஞாபகம் வந்து கேட்டாள்..!!

"அதுசரி.. இதுக்கெதுக்கு நீ ந்யூஸ் பேப்பரை மறைச்ச..??"

"ஒ..ஒன்னும் இல்ல..!!" அசோக்கிடம் மீண்டும் அதே திருட்டுமுழி.

"ஹேய்.. சொல்லுடா..!!"

"ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!!"

"ம்ம்ம்ம்ம்.. சொல்றேன்.. ஆனா.. நீ என்னை கிண்டல் பண்ணக்கூடாது..!!"

"என்ன.. ஓவரா பில்டப்லாம் குடுக்குற..!!"

"பண்ணமாட்டேன்னு சொல்லு..!!"

"சரி..!! பண்ணமாட்டேன்..!!"

"ப்ராமிஸ்..??"

"ப்ராமிஸ்டா..!! சொல்லு..!!"

அசோக் இப்போது சற்றே தயக்கத்துடன்.. அந்த நாளிதழை விரித்து மீராவிடம் காட்டினான்..!! அதில் அச்சிடப்பட்டிருந்த அந்த கொலையாளிகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டான்..!!

"இந்த மூஞ்சிகளை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா..??"

அவன் அவ்வாறு கேட்டதும், மீராவின் முகத்தில் ஒரு குழப்பம்.

"இ..இல்லையே.. யார் இவங்க..??"

"ஹ்ம்ம்.. நீ வேணா மறந்திருக்கலாம்.. என்னால ஜென்மத்துக்கும் இந்த அழகு மூஞ்சிகளை மறக்கவே முடியாது..!!"

"நான் வேணா மறந்திருக்கலாமா..?? நா..நான் பாத்திருக்கேனா இவங்கள..??"

"ம்ம்.. ஆமாம்..!! ஒருதடவை KFCல வச்சு.. இவங்கள பாத்து.. 'நீங்க தேடிட்டு இருக்குற ஆள் இவன்தான்.. இவன்தான்'ன்னு கத்துனியே..!! ஞாபகம் இருக்கா..??" அசோக் அவ்வாறு சொன்னதும், இப்போது மீராவுக்கு பட்டென அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

"ஹேய்ய்ய்.. அ..அது.. அவங்க.. நான் உன்கிட்ட குடுத்த தப்பான மொபைல் நம்பருக்கு கால் பண்ணி.. அதுல பிரச்சினையாகி.. உன்னை போட்டு தள்றதுக்காக ஒரு க்ரூப்.. டாடா சுமோல அலையுதுன்னு சொல்வியே.. அவங்கதான..??"

"ம்ம்ம்..!! ஆனா.. அவங்க என்னை போட்டு தள்றதுக்காக அலையலை..!!"

"அப்புறம்..??"

"இந்த காசியை போட்டு தள்றதுக்காகத்தான் அப்போ இருந்தே அலைஞ்சிருக்காங்க.. எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்..!!"

"எ..என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! உன்னை ஃபோன்ல மிரட்டுனாங்கன்னு.."

"ஆமாம் மீரா..!! ஃபோன்ல என்னை மிரட்டினது உண்மைதான்..!! ஆனா.. ஃபோன்ல மிரட்டினது வேற க்ரூப்பு.. டாடா சுமோல விரட்டினது வேற க்ரூப்பு..!! ஃபோன்ல பேசி முடிச்சதும், பக்கத்துல அந்த டாடா சுமோ வந்து நிக்கவும்.. ரெண்டும் ஒரே க்ரூப்புதான்னு நெனச்சு நான்தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்..!! ரொம்ப நாளா அவனுகள பாக்குறப்போலாம் பம்மிட்டு இருந்தேன்..!!"

அசோக் பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்க, மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

மீராவின் சிரிப்பு அசோக்கின் முகத்தை பட்டென சுருங்கிப் போக வைத்தது.

"ஹேய்... சி..சிரிக்காத மீரா.. ப்ளீஸ்..!!"

"ஹாஹா..!!! ஹையோ.. என் அறிவுக்கொழுந்தே.. முடியலடா..!! எவனோ எவனையோ கொலை பண்ண வெரட்டிருக்கான்.. நீ என்னடான்னா அவனுகளுக்கு பயந்துக்கிட்டு.. உன்னோட சிம் கார்ட்லாம் மாத்தி.. சிவன் கோயில்ல அங்க பிரதட்சணம்லாம் பண்ணி.. எந்த நேரமும் ஒரு மரண பீதியோடவே திரிஞ்சிருக்குற..!! எடுத்த கவாஸாகி ஆட்ல அந்த எஃபக்ட்லாம் வேற..!! ஹ்ம்ம்... வடிவேலை தூக்கி சாப்பிட்டுட்ட நீ..!! செம்ம காமடி போ..!! ஹாஹாஹாஹாஹா..!!" மீரா இடைவிடாமல் தொடர்ந்து சிரிக்க, எரிச்சலான அசோக்

"ப்ச்..!! பாத்தியா.. இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்..!! போடீ..!!" கடுப்புடன் சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

"டேய் டேய்.. ஸாரிடா.. ஸாரிஈஈ..!! என் செல்லம்ல.. என் அம்முல..??" கொஞ்சிக்கொண்டே அவனை சமாதானம் செய்ய பின்னால் ஓடினாள் மீரா.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

மீராவிடம் அன்று பல்பு வாங்கியிருந்தாலும்.. மலரவனிடம் அசோக் பாராட்டு வாங்கியிருந்தான்..!! ரெட்ஹில்ஸ் கொலை வழக்கில் அவனுடைய ஒத்துழைப்பை குறிப்பிட்டு.. காவல்த்துறை அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நன்றியுரைத்தார்..!!

அதன்பிறகும் இரண்டு மூன்று முறை.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் சென்று மலரவனை சந்திக்க நேர்ந்தது..!! விரைவிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. மலரவனும் அசோக்குக்கு நட்பாகிப் போனார்..!! மூவருக்குள்ளும் எந்த மாதிரி நட்பென்று சொல்லவேண்டுமானால்..

மாதவரத்தில் உள்ள ஒரு போலீஸ் குவார்டர்ஸில்.. மலரவனுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மன்டில்.. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண மனைவியை அவர் அனுப்பி வைத்திருந்த சமயத்தில்.. இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி சுவைக்கிற அளவுக்கு..!! சரக்கடித்து மட்டையாக நினைத்தவர்கள்.. தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டுமென்று.. மணலி வரை சென்று மனோகரை பிக்கப் செய்துகொள்ளும் அளவிற்கு..!!

டீப்பாயில் இருந்த டீச்சர்ஸ் பாட்டில் பாதிக்கும் மேல் காலியாகி இருந்தது.. அருகிலேயே மூன்று கண்ணாடி டம்ளர்களும், மூடி திறக்கப்பட்ட ஐஸ் பெட்டியும்..!! டீப்பாயை சுற்றிக்கிடந்த மூன்று சோபாக்களில் டீச்சர்சை உள்ளே தள்ளிவிட்டு.. உச்சிவரை ஏறிய போதையுடன்.. உல்லாச நிலையில் அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும், மலரவனும்..!! மனோகர் மட்டும் தரையில் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான்.. அவனுடைய முகம் அடியும், குத்தும், மிதியும் வாங்கி.. சிற்றெரும்பு புற்றுக்குள் தலையைவிட்ட குரங்கின் முகத்தைப்போல.. கோணல்மாணலாக வீங்கி சிவந்து கிடந்தது..!!

"இனி தண்ணி அடிக்கிறப்போலாம் இவனை இழுத்துட்டு வந்துரலாம் ஸார்.. செம்ம மஸாவா இருக்கு..!!"

மலவரன் குழறலாக சொன்னார். மனோகர் அவரை பரிதாபமாக பார்த்தான்.

"டேய்.. இது ரெண்டுல ஒன்னை தொடு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத்தும் வாய்க்குழறலோடு தனது வலதுகை விரல்களை மனோகரிடம் நீட்டினார். அவனும் தயங்கி தயங்கி ஒரு விரலை தொட்டுக்காட்ட, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது மலரவனிடம் திரும்பி சொன்னார்.

"ம்ம்.. அவனே சொல்லிட்டான் ஸார்.. இவனை ப்ராத்தல் கேஸ்ல புக் பண்ணிற வேண்டியதுதான்..!! பொண்ணுகளை வச்சு பிசினஸ் பண்ணினான்.. ப்ரோக்கர் வேலை பாத்தான்னு சொல்லி ஒரு செட்டப் பண்ணி.. உள்ள தூக்கி போட்ருவோம்..!! 'மாமாப்பய.. மாமாப்பய..'ன்னு எல்லாரும் இவனை கூப்பிடனும்.. இவன் நாக்கை புடுங்கிட்டு சாவனும்..!!"

"ஐயையே.. அதுலாம் வேலைக்காவாது ஸார்.. அந்த மாதிரி செட்டப் பண்றதுலாம் ரொம்ப கஷ்டம்..!! பேசாம.. அந்தக்காசிப்பய மாதிரி இவனும் கஞ்சாப்பொட்டலம் வித்தான்னு சொல்லி செட்டப் பண்ணிரலாம்.. அதுதான் ரொம்ப ஈஸி..!! நார்கோடிக்ஸ் டிப்பார்ட்மண்ட்லதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க நெறைய இருக்காங்களே.. வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்..!! எனக்கு புழல் ஜெயில்ல நெறைய ஆளுங்க இருக்காங்க.. நம்ம பையன் உள்ள இருக்குற ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத மாதிரி பண்ணிருவோம்.. வெளில வர்றப்போ எல்லாம் சூம்பி சுருங்கிப் போய்தான் வருவான்..!! என்ன சொல்றீங்க..??"

"இல்ல ஸார்.. ப்ராத்தல் கேஸ்தான் ரொம்ப கேவலமான கேஸ்.. அதுலதான் இவனை உள்ள போடுறோம்.. நான் டிஸைட் பண்ணிட்டேன்..!!"

"இல்ல ஸார்.. கஞ்சா கேஸ்தான்..!!"

எந்த கேஸில் தன்னை உள்ளே தூக்கிப் போடுவது என்று.. இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. மனோகரோ மிரண்டு போய் அவர்களை பார்த்தான்..!!

"ஸார் ஸார்.. அப்டிலாம் பண்ணிராதிங்க ஸார்.. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் ஸார்..!!"

என்று கெஞ்சினான்.. கையெடுத்து அவர்களை கும்பிட்டான்..!! அவனுடைய கண்களில் கண்ணீர் அரும்ப, ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அவன் மீது சற்றே இறக்கம் வந்தது..!! இறக்கம் வந்தும்..

"நம்பலாமா..??" என்று முறைப்பாகவே கேட்டார்.

"நம்பலாம் ஸார்.. சத்தியமா இனிமே நல்ல புள்ளையா நடந்துக்குறேன்..!!"

"ம்ம்ம்ம்.. தட்டிக்கேட்க ஆளு இல்லன்னா, சேட்டை பண்ண தோணுது உங்களுக்குலாம்.. இல்ல..?? இனிமே எந்தப் பொண்ணுட்டயாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சுச்சு.. அப்புறம் மவனே ஆட்டுறதுக்கு எதுவுமே இருக்காது உன்கிட்ட..!! புரியுதா..??" ஸ்ரீனிவாச பிரசாத் நாக்கை துருத்தி எச்சரித்தார்.

"புரியுது ஸார்..!!"
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
ஐயர் கத்தினார்.. மங்கள மேளம் ஒலித்தது..!! மலர்மாலைகள் தாங்கிய தோள்களுடன்.. அசோக் மீராவின் கழுத்தில் தாலி கட்டினான்.. கிஷோர் சங்கீதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டினான்..!! வந்திருந்தவர்களின் அட்சதை ஆசீர்வாதத்தில்.. மணமேடையில் பூமழை பொழிந்தது..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
அசோக்கிற்கும் மீராவுக்கும் திருமணம் முடிந்த மூன்றாம் நாள்..

'கீழை நாடுகளின் வெனிஸ் நகரம்' என்று அழைக்கப்படுகிற.. கேரளா மாநிலத்தை சேர்ந்த எழில்மிகு ஆலப்புழா..!! சூரியனின் ஆட்சிக்காலம் முடிந்துபோய்.. சந்திரன் தன் ஆளுமையை இவ்வுலகில் செலுத்த ஆரம்பித்திருந்த சமயம்..!! இந்தியாவின் மிக நீளமான ஏரியான வெம்பநாடு ஏரி.. இப்போது இருளில் நனைந்த நீரினால் நிரம்பியிருந்தது..!!

கருநீல நிறத்தில் தழும்பிய காயல் நீரில்.. வெண்ணிலாவின் வெளிச்சம் சிதறி தகதகத்தது..!! கரி அப்பிக்கொண்டு ஏரியின் ஓரத்தில் அணிவகுத்திருந்த தென்னை மரங்கள்.. காற்றுக்கு தங்களது கிளைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தன..!! காற்றில் சம்பா மலர்களின் வாசனை..!! ஏரியிலிருந்து வெளிக்கிளம்பி மொட்டையாக நின்ற கட்டை மரமொன்றில்.. ஏறியமர்ந்து தலைசிலுப்பிய கரிச்சான் குருவியொன்று.. 'கீச்.. கீச்.. கீச்..' என்று ஒலி கிளப்பியது..!!

இருண்டுபோன ஏரியின் மையத்தில்.. பளிச்சென்ற வெளிச்சத்துடன் மிதந்து கொண்டிருந்தது அந்த படகுவீடு..!! கெட்டு வள்ளம் என்று அழைக்கப்படுகிற நீளமான, அகலமான மரப்படகு.. அதன்மீது மூங்கிலாலும், பனை ஓலையாலும் கூரை வேயப்பட்ட அழகுவீடு..!! உட்புறம் ஒளிர்ந்த விளக்குகள் அந்த படகுவீட்டை பிரகாசமாக்கியிருந்தன.. வெளிப்புறம் கசிந்த மஞ்சள் வெளிச்சம் அப்பகுதியின் இருள் போக்க உதவியிருந்தது..!! தண்ணீருக்குள் தங்கத்தேர் என சுருக்கமாக அவ்வீட்டை வர்ணிக்கலாம்..!!

படகின் முற்பகுதி.. பக்கவாட்டில் தடுப்பற்று விடப்பட்டிருந்தது.. பிரம்பு நாற்காலிகள், மர மேஜைகளுடன் உணவு உண்ணுவதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது..!! கூரையில் தொங்கிய குழல் விளக்குகள்.. படகு விளிம்பை ஒட்டிக்கிடந்த வெல்வெட் சோபாக்கள்..!! அதைக்கடந்து.. எதிர்ப்படும் மூங்கில்க்கதவை திறந்தால்.. வீட்டுக்குள் பிரவேசிக்கலாம்..!! உள்ளே.. பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அறைகள்.. நடுவே நீளமாய் சிவப்புக் கம்பள விரிப்பு..!!

இடதுபுறம் இருக்கிற அறைக்குள் நுழைந்தோமானால்..

அறையின் மையத்தில் கிடந்த அந்த மெத்தையில்.. அசமஞ்சமான ஒரு வெளிச்சத்தில்.. அரைநிர்வாண நிலையில்.. அமாவாசையிரவு பாம்புகளாய்.. இரண்டு மனித உடல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நெளிந்து கொண்டிருந்தன..!! அவர்களுக்கு அருகே சென்று உற்றுப்பார்த்தோமானால்..

ஸாரி.. தப்பான ரூமுக்குள்ள வந்துட்டோம் போல இருக்கு.. இது கிஷோரும், சங்கீதாவும்..!! அப்படியே ட்ராலி பேக்வேர்ட் போங்கப்பா..!! ஹிஹி..!!

அறைக்கு வெளியே வந்து.. அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து.. எதிரே தெரிகிற கதவை திறந்து.. சப்தமிடாமல் உள்ளே நுழைந்தோமானால்..



மல்லிகை மலர்கள் தூவிய மஞ்சத்தில்.. மதமதப்புடன் வீற்றிருந்த மீரா பார்வைக்கு வந்தாள்..!! மஞ்சள் நிறத்தில் புடவையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.. கழுத்திலும், காதிலும், கைகளிலும் பொன் நகைகள்..!! கூந்தல் நீளமாக பின்னப்பட்டு.. இறுதியில் குஞ்சம் சேர்க்கப்பட்டிருந்தது..!! மெத்தையில் உதிரியாய் சிதறிக்கிடந்த மல்லிகை.. அவளது கூந்தலில் கொத்துக் கொத்தாய்.. சரம் சரமாய்..!! பக்கவாட்டில் இருந்த மின்விசிறி காற்றெழுப்ப.. அந்தக்காற்றுக்கு அவளுடைய புடவை மேற்கிளம்பி.. ஒற்றைப்பக்க மார்பினையும், வளைவுகுழைவான இடுப்பினையும்.. வஞ்சனையில்லாமல் வெளிக்காட்டியது.. புடவையை இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது..!! அழகுற வீற்றிருந்தவள்.. அவ்வப்போது பக்கவாட்டில் திரும்பி எரிச்சலாக பார்த்தாள்..!!

அவளுடைய பார்வை சென்ற இடத்தில்.. ஒரு பிரம்பு நாற்காலியில் அசோக் அமர்ந்திருந்தான்.. அவன் முன்பாக இருந்த மரமேஜையில் அவனுடைய லேப்டாப் விரித்து வைக்கப்பட்டிருந்தது.. இரவு விளக்கு குனிந்து ஒளி கிளப்பிக் கொண்டிருந்தது..!! அசோக் தனது இமைகளை மூடியிருந்தான்.. தலையை 45 டிக்ரி கோணத்திற்கு டேப்பராக திருப்பியிருந்தான்.. ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் போல காணப்பட்டான்..!! உதட்டை அசைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.. உடலை அவ்வப்போது வெடுக்வெடுக்கென சிலிர்த்துக் கொண்டான்..!! வெட்கத்தில் சிவந்தும் பூரித்தும் போன முகத்துடன்.. தனக்கு முன்பிருந்த இரவு விளக்கை இரு கையாளும் அணைத்துக்கொண்டு.. உதடுகள் குவித்து அந்த விளக்கின் தலையில் முத்தமும் வைத்தான்..!!

அவ்வளவு நேரமும் அவனையே கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்த மீரா.. இப்போது பொறுமை இழந்து போனாள்..!! தனது தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரத்தில்.. கொஞ்சமாய் ஒரு கொத்தை பிய்த்து.. அசோக்கை நோக்கி சரக்கென விட்டெறிந்தாள்..!! அந்த மல்லிகை கொத்தும்.. அவனது முகத்தை சென்று 'சத்'தென்று அறைந்தது..!! அசோக் உடனே உறக்கத்தில் இருந்து விழித்தவன் போல.. படக்கென தனது இமைகள் திறந்தான்.. பக்கவாட்டில் திரும்பி மீராவை முறைத்தான்..!!
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"ஏய்..!!"

"என்னடா பண்ணிட்டு இருக்குற.. லூஸு..!!" மீரா எரிச்சலாக கேட்டாள்.

"ஸீன் யோசிச்சுட்டு இருக்கேன்டி.. டிஸ்டர்ப் பண்ணாத..!!"

"ஸ்க்ரிப்ட் எல்லாம் பக்காவா ரெடின்னு சொன்ன.. இன்னும் என்ன ஸீன் யோசிக்கிற நீ..??"

"ஹஹ.. இது ஃபைனல் ஸீன்..!! லாஸ்ட்டா.. அப்டியே ரொமாண்டிக்கா.. ஒரே கிளுகிளுப்பா.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஸீன்..!! அதைத்தான் அப்டியே இன்வால்வ் ஆகி யோசிச்சுட்டு இருக்கேன்..!!" அசோக் இளிப்புடன் சொன்னான்.

"ஓஹோ..??" மீராவின் முறைப்பு மேலும் கடுமையானது.

"ஆக்சுவலா.. நாம ஆலப்பே வந்ததுக்கு காரணமே அதுதான் மீரா..!! இதே மாதிரி ஒரு நைட் எஃபக்ட்ல.. இதே மாதிரி ஒரு போட்-ஹவுஸ்லதான்.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நான் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிருக்கேன்..!! ஆலப்பேலதான் அந்த ஸீன் ஷூட் பண்ணப்போறோம்.. நாம இங்க லொகேஷன் பாக்க வந்ததே அதுக்குத்தான்..!!"

"ஒய்.. என்ன.. லொகேஷன் பாக்க வந்தோம்னு எங்களையும் உங்க கூட சேர்த்துக்குற..?? நாங்கல்லாம் இங்க லொகேஷன் பாக்க வரல..!!"

"சரி விடு.. தெரியாம சொல்லிட்டேன்..!!"

"ச்சை.. சரியான கஞ்சப் பிசினாரிங்கடா ரெண்டு பேரும்..!!"

"யாரை சொல்ற..??"

"உன்னையும் கிஷோரையும்தான்..!!"

"ஏன்..??"

"பின்ன என்ன..?? ஹனிமூனுக்கு செலவாகும்னு.. ப்ரொட்யூசர் காசுல.. லொகேஷன் பாக்கப் போறோம்ன்ற பேர்ல.. ஹனிமூன் காசை மிச்சம் பண்ணிட்டிங்கல்ல ரெண்டு பேரும்..??"

"ஹாஹா.. இதைத்தான் தமிழ்ல 'புத்தியுள்ளவன் பலவான்'ன்னு சொல்வாங்க மீரா..!!"

"ம்ம்..?? இதைத்தான் தெலுங்குல தெங்கனா கொடுக்கான்னு சொல்வாங்க..!!"

"தெங்கனாவா..?? தெலுங்கானா தெரியும்.. அதென்னா தெங்கனா..??"

"தெரியலைல.. விட்ரு..!!"

"சொல்ல மாட்டியா.. சரி போ..!! ம்ம்ம்ம்ம்... எனக்கு வேலை இருக்கு மீரா.. இந்த ஸீன் எழுதி முடிக்கணும்.. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு..!! காலைல மாணிக்சந்த்தோட பையன் வந்திருவாரு.. அவர் வர்றப்போ ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடியாயிருக்கணும்..!!"

"ம்க்கும்.. பேரைப் பாரு.. மாணிக்சந்த்தாம் மாணிக்சந்த்..!! பையன் பேர் என்ன.. பான்பராக்கா..??" மீரா கிண்டலாக கேட்க, அசோக் சிரித்துவிட்டான்.

"ஹாஹா..!! பான்பராக்லாம் இல்ல.. அவர் பேர் பிரேம்சந்த்..!! நீ அவரை பாத்தது இல்லைல.. நாளைக்கு பாரு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..!!"

"என்ன சர்ப்ரைஸ்..??"

"நாளைக்கு அவரை பாத்து தெரிஞ்சுக்கோ..!!"

"ம்ம்..!! அந்த ஆளு எதுக்கு திடீர்னு இங்க வர்றான்..??"

"லொகேஷன் பாக்கத்தான்..!!"

"ஏன்.. நீங்க பாக்குறது பத்தாதா..??"

"அப்டி இல்ல..!! ஆக்சுவலா.. இந்த ஃபர்ஸ்ட் நைட் ஸீன் மட்டுந்தான் மொதல்ல இங்க ப்ளான் பண்ணிருந்தோம்..!! இப்போ அதோட சேர்த்து.. இன்னொரு டூயட் சாங் கூட இங்கயே ஷூட் பண்ணலாம்னு அவர் அபிப்ராயப் படுறாரு..!! 'தேன் குடிச்ச நிலவு.. விழி மயங்கும் இரவிது.. தினம்தோறும் திருவோணம்தான்..' அந்த ஸ்டைல்ல..!! அதான்.. அவரே நேர்ல லொகேஷன் பாக்க வர்றாரு..!!"

"குத்துப்பாட்டா...??" மீரா முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.

"எஸ்..!!" அசோக் இளிப்பாக பதில் சொன்னான்.

"எப்புடி.. அந்த கொலை ஸீன் முடிஞ்சதும்.. நீயும் நானும் கனவுல குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறமா..??"

"ஐயையே.. தப்பா புரிஞ்சுக்கிட்ட.. நீயும் நானும் இல்ல..!!"

"அப்புறம்..??"

"நானும் மும்தாஜும்..!!" அசோக் கூலாக சொல்ல,

"என்னது..????" மீரா உக்கிரமாக அவனை முறைத்தாள். அசோக் உடனே பம்மினான்.

"அமலா பாலோட ரசிகர்களை திருப்தி படுத்துறதுக்காக-மா..!! படத்துல கொஞ்சம் தூக்கலா.. சும்மா நச்சுனு காமிக்க நெனைச்சிருக்கோம்..!! ஐ மீன்.. அந்த மும்தாஜ் கேரக்டரை..!!"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..!! அப்படி ஏதாவது டூயட் சாங் எடுக்கணும்னா.. அந்த இத்துப்போன இலியானாவோடவே எடுத்து தொலை..!!"

"ஒய்.. என்ன..?? நான் டைரெக்டரா.. நீ டைரெக்டரா.. உன் இஷ்டத்துக்கு ஸ்க்ரிப்டை மாத்துற..??"

"செருப்பு பிஞ்சுடும் ராஸ்கல்..!!" மீரா கத்த,

"என்னது..???" அசோக் வெலவெலத்து போனான்.

"பின்ன என்ன..?? உன்னோட டர்ட்டி ஆசையலாம்.. இந்த மாதிரி படமா எடுத்து தீத்துக்கலாம்னு பாக்குறியா.. பிச்சுப்புடுவேன் பிச்சு..!!!"

"ஐயையே.. இதுல என் ஆசைலாம் எதுவும் இல்ல மீரா.. எல்லாம் ப்ரொட்யூசரோட விருப்பம்..!!"

"அந்தாளுக்கும் செருப்பு பிஞ்சுடும்னு சொல்லி வையி..!! என் ஸ்டோரியை படமா எடுத்து காசு சம்பாதிக்கப் போறீங்க.. எந்த டேமெஜும் பண்ணாம உள்ளதை உள்ளபடி எடுக்கணும் சொல்லிப்புட்டேன்..!!"

"என்ன மீரா..??" அசோக் உடனடியாய் குழைய,

"என்ன.. நொன்ன மீரா..??" மீரா எரிச்சலாக சொன்னாள்.

அப்போதுதான்.. 'ஆஆஆவ்வ்வ்..' என்று பக்கத்து அறையில் இருந்து சங்கீதா எழுப்பிய சத்தம்.. இந்த அறைக்குள் சன்னமாக ஒலித்தது..!! அந்த சத்தத்தில் இருவரும் கவனம் கலைந்து போனார்கள்..!! அந்த சத்தத்தின் அர்த்தத்தை மீரா உடனடியாய் புரிந்துகொண்டாள்.. அசோக்குக்குத்தான் அதன் அர்த்தமும் புரியவில்லை.. அதை எழுப்பியவள் தன் தங்கைதான் என்பதும் புரியவில்லை..!!
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
"என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுல..??" என்றவாறு ஜன்னல் கதவை திறந்து வெளியே எட்டி எட்டி பார்த்தான்.

"ப்ச்.. ஒன்னும் இல்லடா.. விடு..!!" மீரா அதட்டியதும்தான் தேடுவதை கைவிட்டு திரும்பினான். அவன் திரும்பவும்,

"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்....!!" திடீரென நீளமாக பெருமூச்சு விட்டாள் மீரா.

"என்னாச்சு... ஏன் பெருமூச்சு..??" அசோக் புரியாமல் கேட்டான்.

"என்னதான் இருந்தாலும்.. சங்கி குடுத்து வச்சவதான்..!!" மீரா குறும்பாக சொன்னாள்.

"ஹாஹா..!! சங்கி மட்டுமா.. கிஷோரும் குடுத்து வச்சவன்தான்..!! என் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு கெடைக்க.. அவன் நெஜமாவே ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீரா கடுப்பானாள்.

"அடச்சீ.. தத்திலயும் தத்தி, உன்னை மாதிரி தட்டுக்கெட்ட தத்திய நான் பாத்ததே இல்ல..!!"

"ஒய்.. எதுக்கு இப்போ திட்டுற..?? நான் ஒன்னும் தத்திலாம் இல்ல..!!"

"ம்க்கும்..!! லட்டு மாதிரி நான் இங்க ஒருத்தி உக்காந்திருக்கேன்.. நீ நைட் லேம்போட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குற.. உன்னை தத்தின்னு சொல்லாம வேற என்ன சொல்றது..??"

மீரா அவ்வாறு சொன்னதும், அசோக் இப்போது சற்றே நிதானித்தான்.. அவனுடைய முகத்தில் பட்டென ஒரு காதல் உணர்வு.. மீராவின் முகத்தை ஏறிட்டு, ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

"ஹ்ம்ம்.. என்ன பண்ண சொல்ற..?? எனக்கு மட்டும் ஆசை இல்லையா..?? அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா..?? நீதான் வீட்டுக்கு தூரம்னு ஓரமா போய் உக்காந்துக்கிட்ட..!! நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!!"

"என்ன சொன்ன.. என்ன சொன்ன..??"

"அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள.."

"அது இல்ல.. லாஸ்டா என்ன சொன்ன..??"

"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்னு சொன்னேன்..!!"

"இன்னொரு தடவை சொல்லு..!!"

"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!! எதுக்கு திரும்ப திரும்ப அதையே சொல்ல சொல்ற..??"

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??"

"என்ன அர்த்தம்..??"

"ம்ம்..??? மூணு நாள் முடிஞ்சு போச்சுடா முண்டம்னு அர்த்தம்..!!"

அவ்வளவுதான்.. பல்பு போட்ட மாதிரி அசோக்கின் முகம் பட்டென பிரகாசமானது.. 'வாவ்' என்று வாயை திறந்தான்.. படக்கென சேரில் இருந்து எழுந்தான்..!! உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தவனாக,

"மீராஆஆ..!!" என்று உற்சாகமாக கத்தினான்.

"ம்ம்..!!" மீராவுக்கோ உடனடியாய் ஒரு வெட்கம். அவளும் மெத்தையில் இருந்து எழுந்துகொண்டாள்.

"அப்படினா.. இன்னைக்கு உண்டா..??"

"ஆ..ஆமாம்..!!"

"இன்னைக்குத்தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா...??"

"யெஸ்..!! நான் ரெடியாகி உக்காந்திருக்குறதை பாத்தாலே உனக்கு புரியலையா..??"

"ச்ச.. இவ்வளவு முக்கியமான விஷயத்தை எப்படி நான் மிஸ் பண்ணினேன்..??" தன்னைத்தானே நொந்துகொண்ட அசோக்கால்,

"ஐ.க்யு லெவல் கம்மியா இருந்தா இதெல்லாம் சகஜம்தான் அசோக்.. விடு..!!" மீராவின் கிண்டலை புரிந்துகொள்ள முடியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் ஏக்கமுமாக பார்த்தார்கள்..!! மீராவுடைய விருப்பத்துடனோ, விருப்பம் இல்லாமலோ அவளுடைய புடவைத்தலைப்பு கீழே நழுவியது.. அதை தடுத்து நிறுத்தி மேலே போர்த்திக் கொள்கிற எண்ணம்கூட இல்லாதவளாய் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! மஞ்சள்நிற ரவிக்கைக்குள் மாங்கனிகள் ரெண்டு விம்மிக்கொண்டிருந்தன.. முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அசோக்கின் விழிகள், இப்போது சற்றே கீழிறங்கி அந்த மாங்கனிகளை மேய்ந்தன..!!

மனைவியின் மார்பழகை சிலவினாடிகள் வெறித்துப் பார்த்த அசோக்.. இப்போது கைகள் இரண்டையும் உயர்த்தி.. அவளுடைய கன்னங்களை பற்றிக்கொண்டான்..!! அவன் அவ்வாறு பற்றிக்கொண்டதும்.. மீரா தனது இமைகளை மெல்ல மூடிக்கொண்டாள்.. தித்தித்திடுகிற ஒரு முத்தச்சுவைக்கு உடனடியாய் தயாரானாள்.. எந்த நொடியும் கணவனின் இதழ்கள், தனது இதழ்களை வந்து கவ்வலாம் என்று ஆசையாக காத்திருந்தாள்..!!

"ஆனா.. நான் ஸ்க்ரிப்டை முடிக்கணுமே..??"

அசோக் முத்தமிடாமல் அவ்வாறு கவலையாக சொன்னதும்.. மீரா எரிச்சலாகிப்போய் படக்கென இமைகள் திறந்தாள்..!! அந்த எரிச்சலுடனே..

"எல்லாம் காலைல எழுதிக்கலாம்டா..!!" என்றாள்.

"காலைல நான் நல்லா தூங்குவனே..??"

"கவலையே படாத.. உன் டிக்கிலயே நாலு மிதி மிதிச்சு.. நான் உன்னை எழுப்பி விடுறேன்..!!"

"ப்ச்.. அந்தாளு ஆறு மணிக்குலாம் வந்துடுவான் மீரா..!!"

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!!"
 
OP
S
Member

0

0%

Status

Offline

Posts

3,985

Likes

224

Rep

0

Bits

3,702

4

Years of Service

LEVEL 4
125 XP
காலநேரம் தெரியாமல் கடுப்படிக்கும் கணவனை.. மீரா உர்ரென்று முறைத்தாள்..!! 'இனியும் வெக்கப்பட்டால் வேலைக்காவாது' என்பதை உணர்ந்தவள்.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! பாய்ந்து சென்று.. இவளே அவனது உதடுகளை கவ்விக்கொண்டாள்..!!

"மீராஆஆஹ்க்க்....!!!!!"

ஆரம்பத்தில் பதறிய அசோக், அப்புறம் அப்படியே அடங்கிப் போனான்..!! தனது பிடரி மயிரினைப் அழுத்தமாக பற்றியிழுத்து.. தனது இதழ்களை ஆவேசமாக கவ்வியுறிஞ்சுகிற மீராவுக்கு.. அவனால் என்ன எதிர்ப்பு காட்டிவிட முடியும்..?? கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிப்போய்.. அவளுடைய இடுப்பினை பிடிமானமாக பற்றிக்கொண்டான்..!! வாய்வழியே அவனுக்கு அமுதூட்டி.. தனது நாக்கினை அவனுடையதில் தடவவிட்டு.. நீண்டநேர எச்சில் வர்த்தகம் செய்து முடித்து.. மெல்ல மெல்ல மீரா தனது உதடுகளை பிரித்தெடுத்தபோது.. அசோக் விழிகள் செருக நின்றிருந்தான்.. சுர்ரென்று ஏறிய முத்தபோதையில் கிர்ரென்று கிறங்கிப் போயிருந்தான்..!! அந்த கிறக்கத்துடனே..

"லா..லாஸ்ட் ஸீன்.. இ..இன்னும் மிச்சம் இருக்கு மீரா.." என்று திணறலாக சொன்னான்.

"நீ வாடி செல்லம்.. நான் உனக்கு லாஸ்ட் ஸீன் காட்டுறேன்..!!"

குறும்பாக சொன்ன மீரா.. அப்படியே அசோக்கின் மீது சாய்ந்தாள்..!! பேலன்ஸ் இழந்த அசோக் பொத்தென்று மெத்தை மீது வீழ்ந்தான்.. அவன் கூடவே சரிந்த மீரா அவன் மீதே வீழ்ந்தாள்..!! வீழ்ந்த வேகத்தில் அவளது மார்புக்கலசங்கள் ரெண்டும்.. அசோக்கின் நெஞ்சில் சென்று நச்சென்று மோதின.. மெத்தென்று இருந்தது அவனுக்கு..!! சுருக்கென்று ஒரு அதிர்வலை அவனது நாடிநரம்பெல்லாம் பாய்ந்து.. படக்கென அவனுடைய ஆண்மையை விழித்தெழ செய்தது..!! அவ்வாறு எழுந்த ஆண்மையை அவன்மீது படர்ந்திருந்த மீராவின் பெண்மை அழுத்தி அடக்கியது..!!

அசோக் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் விடுபட்டுப் போயிருக்க.. அதன் வழியே அவனது இடதுபுற மார்புக்காம்பு பழுப்பு நிறத்தில் பளிச்சென வெளித்தெரிந்தது.. மீராவுடைய கவனமும் அந்தக் காம்பிலேதான் நிலைத்திருந்தது.. தனது உதட்டாலே அந்த மார்புக்காம்பினை குறிபார்த்தாள்..!!

"ஹேய்.. நம்ம படத்துக்கு டைட்டில் டிஸைட் பண்ணியாச்சு தெரியுமா..??" அசோக் இன்னும் ஸ்க்ரிப்ட் நினைவாகவே இருந்தான்.

"என்ன டைட்டில்..?? ஆயிரம் உதைவாங்கிய அசோக்கு சிந்தாமணியா..??" மீராவிடமும் கேலி குறையவில்லை.

"ச்சேச்சே.. அ..அப்டிலாமா பேர் வைப்பாங்க..?? இது ஆக்சுவலா நானே.." அசோக் திணறலாக சொல்ல,

"ப்ச்.. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இருக்கியா..??" அவனுடைய தொடையை தனது தொடையால் அழுத்தி நசுக்கிக்கொண்டே மீரா சொன்னாள்.

"இதை மட்டும் சொல்லிக்கி.."

அசோக் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. மீரா தான் குறிவைத்ததை தனது உதடுகளால் கவ்வியிருந்தாள்.. அவனது மார்புக்காம்பினை அவ்வுதடுகளால் அழுத்தமாக மூடி, சர்ரென உறிஞ்சினாள்..!! அவ்வளவுதான்.. அசோக் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான்.. சப்தமே எழுப்பாமல் மீராவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தான்..!! அவனது இடது கை.. மீராவின் இடுப்பை விட்டு கீழிறங்கி.. அவளது பின்புறத்தை தடவியது..!! அவனது இன்னொரு கை.. மீராவின் இடுப்புக்கு மேலே சென்று.. அவளது ஒருபக்க மார்பினை பற்றிக் கொண்டது..!! இதயத்தால் ஒன்றிணைந்த இருவரும்.. இப்போது தங்களது உடல்களையும் ஒன்றிணைக்கிற உத்வேகத்தில்.. அதற்கான செயல்முறையில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர்..!!

மரமேஜையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அசோக்கின் லேப்டாப்.. இன்னும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக்கொண்டிருந்தது..!! திரையில் காட்சியளித்த அவன் எழுதிக்கொண்டிருந்த ஸ்க்ரிப்டின் உச்சியில்.. பச்சை நிறத்தில் அந்த டைட்டில் அட்டகாசமாய் பளிச்சிட்டது..!!

"அன்புள்ள ராட்சசி..!!"
 

56,867

Members

334,501

Threads

2,774,144

Posts
Newest Member
Back
Top